Friday 8th of August 2025 - 05:30:15 AM
கோயம்புத்தூர் பெண் அமெரிக்காவில் கைது
கோயம்புத்தூர் பெண் அமெரிக்காவில் கைது
எல்லாளன் / 29 ஏப்ரல் 2024

அசிந்தியா சிவலிங்கம். இவர் கோவையில் பிறந்து, அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாஹாணத்தில் உள்ள பிரிஸ்டன் பல்கலைகழகத்தில் 'சர்வதேச வளர்ச்சியில் பொது விவகாரங்கள்' பிரிவில் முதுகலை பட்டம் படித்து வருகிறார்.

இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை சர்வதே கவனம் பெற்றுள்ள நிலையில், பிரிஸ்டன் பல்கலை கழக வளாகத்திற்குள், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீனத்திற்கு எதிராகவும், போராட்டம் நடத்திய மாணவர்களில் அசிந்தியா சிவலிங்கம் மற்றும் ஹசன் சயீத் என்ற இரண்டு மாணவர்களை நியூ ஜெர்ஸி போலிஸ் கைது செய்துள்ளனர்.

பாலஸ்தீனத்தை ஆதரித்து இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்காக, பல்கலை கழக வளாகத்திற்குள் மாணவர்களை ஒன்று திரட்டி, கூடாரங்களை அமைத்திருந்த அசிந்தியா சிவலிங்கம் மற்றும் ஹசன் சயீத் இருவரையும் கைது செய்ததுடன், அந்த கூடாரங்களை காலி செய்து அங்குள்ள பொருட்களை அகற்றுமாறு போலிஸார் உத்தரவிட்டனர். மாணவர்களின் கைதிற்கு மற்ற மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அசிந்தியா சிவலிங்கம் மற்றும் ஹசன் சயீத் இருவரையும் பல்கலை கழக வளாகத்திற்குள் நுழைய தடை விதித்ததுடன், இருவரின் மேலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என  பிரிஸ்டன் பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அசிந்தியா சிவலிங்கம் கோவையில் பிறந்தாலும் சிறுவயது முதல் அமெரிக்காவின்ன் ஓஹியோ மாஆணம் கொலம்பஸ் நகரில் வசித்து வருகிறார். ஒஹியோ மாஹாண பல்கலை கழகத்தில் 'உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில்' இளங்கலை ப்ட்டம் பெற்றவர் அசிந்தியா சிவலிங்கம்.

டிரண்டிங்
tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி