Friday 17th of April 2026 - 02:57:37 AM
தமிழர் மாண்பு குறைந்து விட்டதா? - கொந்தளிக்கும் ஜி.வி. பிரகாஷ்.
தமிழர் மாண்பு குறைந்து விட்டதா? - கொந்தளிக்கும் ஜி.வி. பிரகாஷ்.
Rajamani / 15 மே 2024

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பாடகி சைந்தவி தம்பதிகள் இருவரும் தாங்கள் தங்கள் திருமண பந்தத்திலிருந்து விலகி விட்டதாக அறிவித்துள்ளனர்.

2013-ம் ஆண்டு ஜூன் 27-ம் திகதி, தங்கள் 5 வருட காதல் வாழ்க்கையின் அடுத்த கட்டமான இல்வாழ்க்கையில் இணைந்த இசையமைப்பளர் ஜி.வி பிரகாஷ் பாடகி சைந்தவி தம்பதியின் 11 வருட திருமண வாழ்க்கை முடிவிற்கு வந்துள்ளது.

இருவரும் தங்கள் விவாகரத்து குறித்து தங்கள் சமூக வலைதளங்களில் அறிவித்துள்ள நிலையில், வழக்கம் போல் பல ஆர்வக் கோளாறுகள் "அண்ணா எங்களுக்காக சேர்ந்து வழுங்கள்", "அண்ணி தயவு செய்து அண்ணனை விட்டு போகாதீர்கள்" என ஏதோ தங்கள் வீட்டில் இனி அடுப்பெரியாது ரேஞ்சிற்கு இரண்டு நாட்களாக சாப்பிடாமல் தூங்காமல் கதறியழுது கமெண்டில் தங்கள் மன குமுறல்களை கொட்டி தீர்த்து வருகிறார்கள்.

இன்னும் பல அதி மேதாவி அதிக பிரசங்கிகள், ஜி.வி. பிரகாஷிற்கும் சைந்தவிக்கும் கவுன்சிலிங் செய்ய தொடங்கியுள்ளனர். மேலும் பலர் யார் மேல் தவறு என பழைய சம்பவங்களை கிளறி சமூக வலைதளங்களில் நீயா? நானா? நடத்தி வருகின்றனர்.

ஆனால், விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு விட்டு உருப்படியான வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த ஜி.வி. பிரகாசிற்கு இந்த சமூக வலைதள ஆர்வக் கோளாறுகளால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது போல் இருக்கிறது.

கடுப்பான ஜி.வி. பிரகாஷ், "ஏண்டா எனக்கு பக்கெட் தூக்கிட்டு திரியுறீங்க?" ரேஞ்சுக்கு ஒரு பதிவை தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை படித்த பிறகாவது திருந்தி தொலைங்கடா அதிக பிரசங்கி பயலுகளா. உங்களால் மொத்த தமிழ் சமூக மாண்பையும் மதிப்பையும் திருமண வாழ்க்கையை சரியாக வாழ முடியாதவர்களெல்லாம் கேள்வி கேட்கும் நிலமை உருவாகியுள்ளது.  

டிரண்டிங்
உலகின் ஒரே கொதிக்கும் நதி. 200 டிகிரி வரை உயரும் கொதிநிலை
உலகம் / 14 டிசம்பர் 2024
உலகின் ஒரே கொதிக்கும் நதி. 200 டிகிரி வரை உயரும் கொதிநிலை

மர்மங்கள் நிறைந்த இந்த காடுகளுக்குள் சென்று விட்டால் எளிதில் மீண்டு வர முடியாது. ஏனெனில் பலவிதமான வி

2001-இல் பெய்த ரத்த மழை. இந்தியாவை உலகமே திரும்பிப் பார்த்த சம்பவம்.
வரலாறு / 14 டிசம்பர் 2024
2001-இல் பெய்த ரத்த மழை. இந்தியாவை உலகமே திரும்பிப் பார்த்த சம்பவம்.

1896 ஆம் ஆண்டு முதன் முதலில் கேரளாவில் ரத்த மழை பெய்துள்ளது. அதனை அடுத்து 2001 ஆம் ஆண்டு நடந்த நிகழ்

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
கடலில் மூழ்கிய பூம்புகார்‌. வியப்பூட்டும் ஆய்வின் ரகசியங்கள்.
வரலாறு / 13 ஜனவரி 2025
கடலில் மூழ்கிய பூம்புகார்‌. வியப்பூட்டும் ஆய்வின் ரகசியங்கள்.

மொத்த உலகையும் புரட்டி போடும் அளவிற்கு ஒரு கண்டுபிடிப்பு நமது தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது. அதுதான்

   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி